யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கான உதவித் திட்டங்களை மேற்கொண்டு வருகின்ற மீட்சி அமைப்பு, பால்சேனை, கதிரவெளியில் வாழுகின்ற மாற்றுத் திறனாளியும் மூன்று பிள்ளைகளின் தந்தையுமாகிய தட்ஷனாமூர்த்தி என்பவருக்கு, சிறு தேனீர்க் கடைக்கு தேவையான காஸ் குக்கர்,காஸ் சிலிண்டர் என்பவற்றை வழங்கி வைத்துள்ளது.
பிரதேச செயலகம் வழங்கிய தற்காலிகமான காணியில் ஓலைக் கொட்டில் போட்டு, தேனீர் கடை நடாத்தி வரும் வருமானத்தில் கல்வி கற்கும் மூன்று பிள்ளைகளையும் பராமரித்து வருகின்ற தட்ஷனர்மூர்த்தியின் தொழிலுக்கு முதற் கட்டமாக வழங்கப்பட்டுள்ள இவ்வுதவி அவரது தொழில் முயற்சிக்கு உறுதுணையாக அமைந்திருக்கிறது.
பல்வேறு சிரமங்களின் மத்தியில் தொழில் செய்து குடும்பத்தினைப் பராமரித்து வருகின்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கான தொழில் முயற்சிகளுக்கான உதவிகளை மீட்சி தொடர்ந்தும் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.